தேவையான பொருட்கள்
காய்கறி கலவை - 1 கப் (கேரட்,பீன்ஸ்,முட்டைகோஸ்)
தக்காளி - 1
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 4 பல்
மிளகு தூள் - தேவையான அளவு
வெண்ணெய் - 1 ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
காய்கறி கலவை - 1 கப் (கேரட்,பீன்ஸ்,முட்டைகோஸ்)
தக்காளி - 1
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 4 பல்
மிளகு தூள் - தேவையான அளவு
வெண்ணெய் - 1 ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- குக்கரில் தண்ணீர் ஊற்றி பொடியாக நறுக்கிய காய்கறிகள், தக்காளி சேர்க்கவும். இதனுடன் மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு இவற்றை லேசாக தட்டி ஒரு சிறிய துணியில் முடிந்து போடவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு குலைய வேகவிடவும்.
- நன்கு வெந்தவுடன் முடிந்த துணியை தனியே எடுத்துவிட்டு காய் கறிகளை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து அதை வடிகட்டி வைக்கவும்.
- ஒரு வானெலியில் வெண்ணெய் போட்டு அது சிறிது இலக ஆரம்பிக்கவும் வடிகட்டி வைத்ததை ஊற்றவும்.
- சுரு சுருவென்று வந்ததும் சோலமாவினை(கார்ன் ஃப்ளார்) கரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.
- பரிமாறும் போது விருப்பத்திற்கேற்ப மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு : பரிமாறும் போது கார்ன் அல்லது பொறித்த பிரட் துண்டுகள் சேர்த்தும் பரிமாறலாம்.
Related Article:
No comments:
Post a Comment
கருத்துக்களை வரவேற்கிறோம்............!